வவுனியா பன்றிகெய்தகுளம் மற்றும் நாவற்குளம் பகுதிகளில் விலங்குகளை வேட்டையாடுவதற்கு பயன்படும் சட்டவிரோத துப்பாக்கிகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சட்ட விரோதமாக துப்பாக்கிகளை (இடியன்துவக்கு) மறைத்து வைத்திருப்பதாக ஓமந்தை காவல்துறையினருக்கு கிடைத்த தகவலினையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மீட்கப்பட்டதுடன் எவரும் கைது செய்யப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.