தற்காலிகமாக மூடப்படுகிறது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்!

sl
sl

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலக சாரதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த பணியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பத்தரமுல்லயில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகத்தில் பணிபுரியும் குறித்த சாரதிக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து வேலைவாய்ப்பு பணியகத்தில் பணிபுரியும் ஏனைய 50 சாரதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 0112880500 எனும் 24 மணி நேர தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்புகொள்வதன் மூலம் சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.