கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகர முதல்வர் ரோசி சேனாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
முன்னதாக கொழும்பு மாநகர சபையின் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியான நிலையில் ஏனையோருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையிலேயே 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.