முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளுக்கும் குரல்கொடுக்க வேண்டும்-மனோ கணேசன்!

mano
mano

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பிலும், தடுப்புக்காவலில் உள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தொடர்பிலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசி வருவதாகவும், அதற்கு இணையாக முஸ்லிம் அரசியல் தலைமைகளும், தமிழர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்

முஸ்லிம் அரசியல் தலைமைகள் அரசியல் கைதிகள் மற்றும் தோட்டத் தொழிலாளரின் சம்பள விவகாரம் தொடர்பாக குரல் கொடுக்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.