கிளிநொச்சி மாவட்டத்தில் புன்னகை பூமி சிறுவர் மேம்பாட்டு மையம் இன்று (12)கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது.
சிறுவர் மகிழ்ச்சி நிலையத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று திறந்து வைக்கப்பட்ட புன்னகை பூமி நிலையத்தில் சிறுவர் மேம்பாடு, இயற்கை பாதுகாப்பு , குடும்ப வலுவூட்டல் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
மகிழ்ச்சி, மலர்ச்சி, எழுச்சி எனும் தொனிப்பொருளில் குறித்த புன்னகை பூமி சிறுவர் மகிழ்ச்சி நிலையம் இன்றுமுதல் தனது சேவையை ஆரம்பித்துள்ளது.
குறித்த ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு குறித்த நிறுவன கட்டடத்தினை திறந்து வைத்தார். நிகழ்வில் கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன், கிராமசேவையாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
குறித்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மயூரன் கருத்து தெரிவிக்கையில்,இந்த மண்ணிலே புன்னகை பூமி ஊடாக சேவைகளை முன்னெடுக்கவும், மக்களிற்கு மகிழ்ச்சியானதும் ஆரோக்கியமானதற்குமான சேவைகளை இன்று ஆரம்பிக்கின்றோம். உளநலம் சார்ந்த சேவைகள் மற்றம் மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஊக்குவிப்புக்கள், சிறுவர்களிற்கான திறண்விருத்தி பயிற்சிகள் என சேவைகளை இதன் ஊடாக வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.