மேலும் 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

download 30
download 30

இலங்கையில் மேலும் 632 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்களுள் 551 பேர் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஏனைய 81 பேரும் சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 32,007 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.