கொழும்பில் 13,710 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!

COVID 19 Final
COVID 19 Final

கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் கடந்த அக்டோபர் 4ஆம் திகதியில் இருந்து நேற்று வரை கொழும்பு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 710 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

மேலும் நேற்று மாத்திரம் 445 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் சில பகுதிகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.