பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்-அமைச்சர் சரத் வீரசேகர!

1 212 1
1 212 1

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்களில் ஈடுபவோர் கைது செய்யப்பட்டு பின்னர், அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

இவ்வாறான குற்றங்களைச் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் இது போன்ற நபர்கள் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.