அடுத்த ஆண்டில் இருந்து வெதுப்பாக உற்பத்திப்பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என் கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாக செலவுகள் உயர்வடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே இதற்கான தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்மானம் எட்டப்படும் எனவும் அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.