மன்னார் பொது வைத்திய சாலையில் ஏற்பட்டுள்ள குருதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக தாய் நிலம் அறக்கட்டலையின் அனுசரனையில் பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக அதன் இணைப்பாளர் சதீஸ் தலைமையில் இரத்ததான முகாம் நேற்று(13)காலை நானாட்டான் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கமைக்கப்பட்டு இடம் பெற்றது
மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த இரத்த தான முகாமில் குருதியை பெற்றுக்கொண்டதுடன், நானாட்டான் பகுதியை சேர்ந்த அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தான முகாமில் குருதி வழங்கியிருந்தனர்.
குறித்த இரத்த தான முகாமனது பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.