மட்டக்களப்பில் சுற்றுலாத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல்

IMG 20201212 WA0041
IMG 20201212 WA0041

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாதுறை தொடர்பான பிரச்சினைகளை இனங்காணுதல் மற்றும் அதற்கான தீர்வுகள் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை தவிசாளர் ரி. ஹரிபிரதாப் தலைமையில் மட்டக்களப்பு சர்வோதயா அமைப்பின் மண்டபத்தில் நேற்று (13) இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா பணியககத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு சர்வோதயாவில் ஞாயிற்றுகிழமை காலை 9 மணிக்கு இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் மட்டக்களப்பு சுற்றுலா அபிவிருத்தி சங்கத்தினர்கள். கிழக்கு மாகாண சுற்றுலா பணியக தவிசாளர் ரி.ஹரிபிதாப், பொது முகாமையாளர் கலாநிதி ஆர்..ஞானசேகர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர். என்.ஏ. நிரோஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது பல பிரச்சனைகள், ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதுடன் மேலதிகமான சுற்றுலா தலங்களும் அமைப்பது மற்றும் அபிவிருத்தி பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டது குறிப்பிடத்தக்கது.