அம்பாறை – மாளிகைக்காடு கிழக்கு பகுதிக்கு மறுஅறிவித்தல் வரை பூட்டு!

b628d8e8 8e18 46e9 bf4f cc66a8d5e0f5
b628d8e8 8e18 46e9 bf4f cc66a8d5e0f5

அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளன.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (திங்கட்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது.

இன்று கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே இக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி ஜீவராணி சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.

மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு அமைய காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் வீதிகளுக்கு குறுக்காக கயிறுகளில் எச்சரிக்கை பதாதை போடப்பட்டு மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, உடன் அமுலுக்கு வரும்வகையில் வெளியிடங்களில் இருந்து மாளிகைக்காடு கிழக்கு நோக்கி வருபவர்களை தடுப்பதற்காக காலவரையறையின்றி மூடப்படுவதாக காரைதீவு சுகாததார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

2dd6dc83 d68e 4ef0 83f3 9ce99be3c952 1
2dd6dc83 d68e 4ef0 83f3 9ce99be3c952
b628d8e8 8e18 46e9 bf4f cc66a8d5e0f5
50bc8ac3 f505 4c3b bc12 32b6eb3e071f
9079b701 e322 463b bf98 a0527c8c9a70
079b701 e322 463b bf98 a0527c8c9a70