ஜனாதிபதியிடம் நேரடியாக பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த நா.உ திலீபன்!

IMG 4849
IMG 4849

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் ஜனாதிபதியிடம் வன்னி மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளை நேரடியாக தெரியப்படுத்தினார்.

நேற்று ஜனாதிபதி செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனை முன்வைத்துள்ளார்.

இதன் பிரகாரம் அபிவிருத்தி குழு தலைவர்கள் செயற்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு அரச அதிகாரிகளும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் இதன் மூலமே மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர வசதியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். நீண்ட காலமாக மக்கள் வாழும் காணிகளில் இருந்து வனவளத்திணைக்களம் வெளியேறுமாறு கூறுவதால் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

இதனை செவிமடுத்த ஜனாதிபதி இவ்வாறான நிலை காணப்படும் பட்சத்தில் அதனை சீர் செய்வது தொடர்பிலும் உத்தரவாதமளித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு விடயங்கள் தொடர்பில் நேற்று ஜனாதிபதியின் கவனத்திற்கு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டு சென்றுள்ளார்.