முன்னாள் நா.உ அப்துல்லா மஹ்ரூப் மற்றும் பாருக் மொஹமட் அஸ்லாம் ஆகியோருக்கு விளக்கமறியல்!

202011300420433515 Clash between two sides near Wickramangala Case against 8 SECVPF 1
202011300420433515 Clash between two sides near Wickramangala Case against 8 SECVPF 1

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் மற்றும் மாத்தளை பகுதியை சேர்ந்த பாருக் மொஹமட் அஸ்லாம் ஆகியோரை நாளை வரையில் விளக்கமறியலில் வைக்கப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2015 முதல் 2019 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கை சதொச நிறுவனத்தின் வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கின்னியா மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யட்டனர்.