சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நால்வர் கட்சியிலிருந்து நீக்கம்

slfp 1
slfp 1

ஜனாதிபதித் தேர்தலின் போது கட்சி முடிவிற்கு மாறாக செயற்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நால்வர் கட்சி உறுப்புரமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் முன்னதாக டிலான் பெரேர, எஸ்.பி.திசநாயக்க, லக்ஷ்மன் யாபா அபேவர்தன ஆகியோர் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டமை, விஜித் விஜயமுனி சொய்சா ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்தமை போன்ற காரணங்களுக்காக கட்சியை விட்டு நீக்க சுதந்திரக்கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளது.

நேற்றைய தினம் ஏ.எச்.எம். பௌசியின் உறுப்புரிமையினை நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.