கொரோனாவை தடுப்பததற்கான சுகாதார வழிமுறைகளுக்கு அமைய வழங்கப்பட வேண்டிய தகவல்களை மறைப்பவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளை கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்துள்ளார்.
போலியாக வழங்கப்படும் தகவல் குற்றமாக பதிவு செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.