வவுனியாவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!! நகரில் குழப்பம்!!

IMG 220f86c3ec4d48e7ba97f907fac9a97f V
IMG 220f86c3ec4d48e7ba97f907fac9a97f V

வவுனியா இலுப்பையடிப்பகுதியில் கெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த நபர் ஒருவரை வவுனியா காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் கெரோயின் விற்பனை இடம்பெற்றுவருவதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கிற்கமைய, கெரோயினை கொள்வனவுசெய்வதற்காக காவல்துறையினரால் திட்டமிடப்பட்டு நபர்ஒருவர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

காவல்துறையினரால் அனுப்பப்பட்ட நபர் போதைப்பொருளை கொள்வனவு செய்ததுடன், விற்பனை செய்த நபரைகாவல்துறையினரிடம் அடையாளப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் குறித்த நபரை கைதுசெய்ய முனைந்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பமான சூழல் ஏற்ப்பட்டிருந்தது.

கெரோயினை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தான் ஐயப்பன் விரதம் அனுஸ்டித்துவருவதாகவும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடவில்லை என்றும் தன்னை கைதுசெய்யவேண்டாம் என்றும் காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளார். இதனால் குறித்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடியதுடன், குழப்பமான நிலையும் ஏற்ப்பட்டிருந்தது. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

இதேவேளை கைதுசெய்யப்பட நபரிடம் மேலும் போதைப்பொருள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் வவுனியா சதோசவிற்கு பின்பான பகுதியில் காவல்துறையினரால் தேடுதல் நடாத்தப்பட்டு வருகின்றது

IMG 431c78b7a0fd21fd23c649b4d5a92823 V
IMG 3bb932d3c7f458ebd2d1b9648b9dea5d V
IMG 431c78b7a0fd21fd23c649b4d5a92823 V 1
IMG 220f86c3ec4d48e7ba97f907fac9a97f V