நாட்டில் தனிமைப்படுத்தப்படாத இடங்களில் நத்தார் ஆராதனைக் கூட்டங்களை ஒருதடவையில் 50 பேருக்கு மேற்படாத எண்ணிக்கையானவர்களைக் கொண்டு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க பேராயர், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சூழலைக் கருதி இந்தமுறை கட்டுப்பாடுகளுடன் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டியுள்ளது.
இதற்கான ஆராதனைக் கூட்டங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மக்களை அனுமதிக்க முடியும்.
இதன்படி தனிமைப்படுத்தப்படாதுள்ள இடங்களில் 50க்கும் மேற்படாத எண்ணிக்கையைக் கொண்ட குழுக்களுக்கு கட்டம் கட்டமாக ஆராதனை கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.