வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா

realistic coronavirus background 52683 35109
realistic coronavirus background 52683 35109

வவுனியா திருநாவற்குளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களிற்கு முன் திருநாவற்குளத்தை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது. இவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 15ம் திகதி மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் நேற்று இவர்களிற்கு தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை வவுனியாவில் இதுவரை 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வவுனியாவில் பல இடங்களிலும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதேவேளை திருநாவற்குளம் பிரதேசம் முடக்கப்படும் நிலையேற்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.