கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை – சிறைச்சாலை திணைக்களம்

1

நத்தார் பண்டிகையன்று வழமையைப் போன்று கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகளை இராணுவத்தினரால் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இது வரையில் இவ்வாறு 8000 கைதிகள் புனர்வாழ்வுக்கு உ;ட்படுத்தப்பட்டுள்ளனர். இதே வேளை கைதிகளின் குடும்பத்தாருக்கு அல்லது உறவினர்களுக்கு நத்தார் பண்டிகை தினத்தன்று வழமை போன்று அவர்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படுகின்ற வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது வரையில் சிறைச்சாலைகளில் (நேற்று மாலை வரை) 3279 கைதிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 2584 கைதிகளும’ , 144 பேர் சிறைச்சாலை அதிகாரிகளுமாவர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 73 அதிகாரிகளும் , 1189 கைதிகளும் குணமடைந்துள்ளனர் என்றார்.