மேலும் 223 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

திரும்பினர் 3
திரும்பினர் 3

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 223 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 35 பேர், மலேசியாவிலிருந்து 14 பேர், கட்டாரிலிருந்தும் 119 பேர் மற்றும் இந்தியாவிலிருந்து 55 பேர் ஆகியோர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற் பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகின்றது