இன்று (20) தேவாலயங்கள் சிலவற்றுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்படப் போவதாக வட்ஸ்-அப் மூலம் உண்மைக்குப் புறம்பாக வதந்திகளைப் பரப்பிய தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றும் தலைமைக் கணக்காளர் ஒருவர் கந்தானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
31 வயதுடைய கந்தானை – வெலிகம்பிட்டிய பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இவரை விளக்கமறியலில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
இன்று (20) காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவர் இதனைத் தொிவித்தார்.