கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

kaithu

மன்னார் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் – அடம்பன் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையினை தொடர்ந்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

46 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் எனவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆண் ஒருவரும் பெண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளர்.

காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.