இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

IMG 20201221 WA0009
IMG 20201221 WA0009

யாழ்.தீவகத்தில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு வளர்க்கும் மாடுகளை களவாடி இறைச்சிக்காக வெட்டும் கும்பல்கள் தொடர்பில் காவல்துறையினர் அசண்டையீனமாக இருப்பதாக குற்றஞ்சாட்டி மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பசுவின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.கடந்த 8 ஆம் திகதி வேலணை மேற்கு 8 ஆம் வட்டாரத்தில் வைத்து குறித்த

பசு கன்று களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் பசு உரிமையாளர் ஊர்காவற்றுறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தும்

காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தே இவர் நேற்று யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.