வெள்ளத்தில் மூழ்கிய பகுதிகளை பார்வையிட்ட பிள்ளையான் மாவட்டத்தில் முதலில் வடிகாண்கள் அமைக்கப்படும் என தெரிவிப்பு!

IMG 5869

மட்டக்களப்பில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்துவரும் பரவப்பெயர்சி மழையினால் மட்டக்களப்பு நகர்ப் பகுதிகளான கூளாவடி. ஊறணி, இருதயபுரம் உட்பட பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது இதனையடுத்து இன்று செவ்வாய்க்கிழமை (22) இந்த பகுதிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) சென்று பார்வையிட்டு வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்

IMG 20201222 WA0035

இந்த மழை வெள்ள நீரினால் முழ்கியுள்ள கூளாவடி பிரதேசத்திற்திற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சந்திரகாந்தன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் குறித்த பகுதியில் தேங்கி நிற்கும் வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும்
அடுத்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலில் சகல வீதிகளுக்கும் நீர் வழிந்தேடக் கூடியதாக வடிகாண்கன், பாலங்கள். அமைக்கப்படும். அதன் பின்னர் வீதிகள் அமைக்கப்படும். இதற்கான முன்மொழிவுகளை மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

IMG 20201221 WA0057