இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

rain srilanka001
rain srilanka001

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை மேலும் சில தினங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்,மாத்தளை, அம்பாந்தோட்டை நுவரெலியா மாவட்டங்களிலும் 50 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்பதோடு, 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.