கொரோனா அச்சத்தால் பெண் ஒருவர் தீயிட்டு தற்கொலை

death body 1000x600 1
death body 1000x600 1

கொரோனா தொற்று ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக தாய் ஒருவர் தீயிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுமாயின் குறித்த தொற்றானது தனது பிள்ளைகளையும் பாதிக்கும் என நினைத்தே தீயிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குறித்த தாயின் மகன் ஒருவர் காவல் துறையினருக்கு அளித்த வாக்கு மூலத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டவர் வத்தளை, ஹுனுபிட்டி, வெடிகந்த வீதியை சேர்ந்த 73 வயதுடைய 5 பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.