கிளிநொச்சி மாவட்ட மத்திய பேருந்து நிலையம் பயணிகள் பயன்படுத்த முடியாத மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.
மழை, வெள்ள நீர் தேங்கி நிற்பதோடு அதற்குள் கழிவுகளும் சேர்ந்து இருப்பதால் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை சிரமமின்றி ஏற்றி இறக்க முடியாத சூழ்நிலையில் காணப்படுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இப் பணிகளை முன்னெடுக்க நிர்வாகம் மற்றும் அரசியல் தரப்புக்கள் எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கும் பேருந்து உரிமையாளர்கள், குறைந்தபட்சம் மழைக்காலங்களில் பயணிகள் சிரமம் இன்றி வந்து செல்வதற்கு ஏற்ற வகையில் சீரமைத்து தருமாறு கரைச்சி பிரதேச சபையிடம் நேரடியாக தெரிவித்தும், அவர்கள் எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை.
எனவே, உரிய தரப்பினர் கூடுதல் கவனம் செலுத்தி பேருந்து நிலையப் பகுதியினை தற்காலிகமாவது சீர்செய்து தருமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.