தமிழ் மொழி தொடர்பில் பிரதமர் மஹிந்தவின் அதிரடி!

mahinda 2
mahinda 2

தென்னிலங்கையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாணாந்துறை மற்றும் கெரவலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளின் பெயர்ப்பலகையில் உள்ள தமிழ்மொழி இனந்தெரியாதவர்களினால் அகற்றப்பட்டிருந்த நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின் சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் வகையில் பேரினவாதிகளின் செயற்பாடுகள் ஆரம்பித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அவ்வாறான விமர்சனங்களிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீதிகளின் பெயர்ப்பலகைகளில் உள்ள தமிழ்மொழியை அகற்றியவர்கள் தொடர்பில் உடன் விசாரணைகளை ஆரம்பித்து அவர்களைக் கைது செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.