கொத்தமல்லி என்ற போர்வையில் விவசாய கழிவுகள் அடங்கிய 28 கொள்கலன்களை இறக்குமதி செய்தமை தொடர்பில் பாஸல் அமைப்பில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டில் இருந்து மற்றுமொரு நாட்டிற்கு, கழிவுகளை ஏற்றுமதி செய்தல் அல்லது இறக்குமதி செய்வதற்கு சர்வதேச பாஸல் அமைப்பு தடை விதித்துள்ளது
கொத்தமல்லி என்ற போர்வையில் யுக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் நேற்று பறிமுதல் செய்யப்பட்டன
இந்த நிலையில், குறித்த 28 கொள்கலன்களை யுக்ரேனிற்கு மீள அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், Basel அமைப்பில் முறைப்பாடு பதிவு செய்யுமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவுறுத்தியுள்ளார்.