கொழும்பில் அதிகளவிலான கொரோனா தொற்றாளர்கள் வெள்ளவத்தை பகுதியிலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பகுதியில் மட்டும் 48 கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளவத்தைக்கு அடுத்த படியாக வெல்லம்பிட்டி பகுதியிலேயே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
வெல்லம்பிட்டி பகுதியில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கொள்ளுபிட்டி பகுதியில் 17 தொற்றாளர்களும், கிருலபனை பகுதியில் 13 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறித்த மையம் தெரிவித்துள்ளது