அட்டாளைச்சேனையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராட்டம்

vlcsnap 2020 12 26 09h43m28s681
vlcsnap 2020 12 26 09h43m28s681

ஜனாஸா எரிப்புக்கெதிராக, அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களில், கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்று அட்டாளைச்சேனை ஒலுவில் பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம், ஒலுவில் ஜும்ஆப் பள்ளிவாசல் முன்பாக இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு சுலோகங்களை ஏந்திவாறு கோசமிட்டனர். 

“தீயினால் எங்கள் உணர்வுகளை எரிக்கவேண்டாம், துவேசத்தை கக்காதே, ஜனாஸாக்களை ஏரிக்காதே, உலகம் முழுவதும் ஜனாஸாவை அடக்குகிறது ஆனால் நம் அரசு ஏன் ஏரிக்கிறது, அரசே எங்கள் கடமையையும் உரிமையையும் பறிக்காதே, ஆட்சியை நாங்கள் கேட்கவில்லை ஜனாஸாவை அடக்கம் செய்யவே கேட்கின்றோம், பற்றவைக்கிறாய் ஜனாஸாகளை பதறுகின்றது நெஞ்சம், மண்ணறைக்கு செல்ல வேண்டியதை மின்னறைக்கு அனுப்புவதேன், நிபுணர்கள் குழுவே உலகை அறி உண்மையை உரை என்ற வாசகங்களை சொல்லி எதிரப்பு கோசங்ளைத் தெரிவித்தனர்.

இந்த அமைதியான கவனயீர்புப் போராட்டத்தில் பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.