வவுனியா கந்தசாமி கோவிலில் சுனாமியில் இறந்தவர்களுக்காக அஞ்சலி!

DSC07618 1

சுனாமி அனர்த்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூர்ந்து வவுனியா கந்தசாமி கோவிலில் அஞ்சலி பூசை வழிபாடுகள் இன்று (26) காலை 8 மணியளவில் இடம்பெற்றது. 

DSC07618


வவுனியா அந்தணர் ஒன்றியம், கந்தசாமி கோவில் நிர்வாக சபை மற்றும் தமிழ் விருட்சம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த அஞ்சலி நிகழ்வு அந்தணர் ஒன்றியத்தின் செயலாளர் பிரபாகர குருக்கள் தலைமையில் இடம்பெற்றது. 

DSC07591


இதன்போது வவுனியா அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன, பிரதி காவற்துறை மா அதிபர் லால் செனவிரத்ன, வவுனியா காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி மானமடுவ, தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், தமிழருவி சிவகுமாரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.