கல்மடு குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போன நபர் சடலமாக மீட்பு

132785167 1049333858869057 5765405990772817729 o
132785167 1049333858869057 5765405990772817729 o

கிளிநொச்சி – கல்மடுக் குளத்தில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளார்.

கல்மடு நகர் சம்புக்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த நபர் மூன்று பேருடன் குளத்திற்கு சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தார்.

இந்தநிலையில் பிரதேச மக்கள் உள்ளிட்ட தரப்பினர் அவரை தேடும் பணிகளை முன்னெடுத்திருந்த நிலையில் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.