வவுனியாவில் சிறப்பாக நடைபெற்ற சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவின் மண்டல பூஜை!

DSC07929
DSC07929

வவுனியாவில் சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவின் மண்டல பூஜை சிறப்பான முறையில் இடம்பெற்றது.

வவுனியா உக்குளாங்குளம் ரகுபாக்கத்தில் நேற்று (26) இரவு சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து இடம்பெற்ற இப்பூஜை நிகழ்வின் போது ஐயப்பனுக்கு விசேட அபிஷேக ஆராதனைகளும், தீபாரதனைகளும் இடம்பெற்றிருந்ததுடன் ஆனந்தமிகு ஐயப்ப பயனையும் இடம்பெற்றிருந்தது.

இவ் மண்டல பூஜை நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த குருசாமிகள், ஐயப்ப சாமிகள், அடியார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

சபரிவாசன் தீர்த்த யாத்திரை குழுவினரால் உபயகாரர்கள் மற்றும் இவ்யாத்திரைக்குழுவின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களை கௌரவிக்கும் முகமாக நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

DSC08114
DSC08160
DSC08176 1
DSC08181
DSC08095
DSC08081
DSC08058