நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட சுகாதார தொண்டர்கள் இன்று தமது கடமைகளை பொறுப்பேற் சென்ற வேளையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தெளிவுபடுத்தலினை அடுத்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலகத்து முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றது.
வட மாகாண சுகாதார அமைச்சினால் சுகாதாரத் தொண்டர்கள் பணியாற்றியவர்களை நேர்முகத்தேர்வு ஒன்றின் மூலமாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று தமது கடமைகளை பொறுப்பேற்க சமூகமளித்தனர்.
இந்நிலையில் நிதி அமைச்சின் பணிப்பில் நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளால் சுகாதாரத் தொண்டர்கள் கடமையை ஏற்க அனுமதிக்க முடியாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுள்ளனர்.