மேலும் 36 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

திரும்பினர் 6
திரும்பினர் 6

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 36 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்தனர்.

அதன்படி, இந்தியாவிலிருந்து 18 பேர் , கட்டாரிலிருந்து 16 பேர் மற்றும் சவூதி அரேபியாவிலிருந்து 02 பேர் ஆகியோர் கட்டு நாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.