தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில், மாணவர்களுக்கு தற்காலிக பாடசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவிக்கின்றார்.
இதன்படி, பெற்றோரின் கோரிக்கைகளுக்கு அமைய, அருகிலுள்ள பாடசாலைகளில் கல்வி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் கூறினார்.