கல்முனை பொதுசந்தையில் சில வர்த்தகர்கள் தலைமறைவு: 27 பேருக்கு கொரோனா!

.jpg
.jpg

கல்முனை மாநகர பொதுச் சந்தை பகுதியை இராணுவத்தினர் பொது சுகாதார அதிகாரிகளுடன்  இன்று திங்கட்கிழமை (27) சுற்றிவளைத்து அங்குள்ளவர்களுக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோனைகள் மேற்கொள்ளப்பட்போது அங்கிருந்தி சில வர்த்தகர்கள் கடைகளை அவசராமக மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனா.

அதேவேளை அங்கு 200 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 27 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது.


கல்முனை தெற்கு சுகாதாரப் பிரிவில் கொரோனா தொற்று தீவிரமடைந்த நிலையில் இன்று திங்கட்கிழமை கல்முனை மாநகர பொதுச்சந்தையை காலையில் இராணுவத்தினர் திடீரென சுற்றிவளைத்து சந்தைப்பகுதிக்கு செல்லவே வெளியேறவே முடியாதவாறு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .


இந்த நிலையில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ சுகுணனின் நேரடி கண்காணிப்பில் பொதுசுகாதார அதிகாரிகள் அந்த பகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட மற்றும் பொருட்களை கொள்வனவு செய்ய சென்றவர்கள் உட்பட 200 பேருக்கு பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை எழுமாதியாக மேற்கொண்டனர்.

இதன்போது சந்தைவர்த்தக சங்கத்தினர் முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். 

ஷஇருந்தபோதும் சில கடை வர்த்தகர்கள் திடீரென கடைகளை மூடிவிட்டு அங்கிருந்து தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றதுடன் 200 பேருக்கு மேற்கொண்ட இந்த பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 27 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 
இவர்களுடன் தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்  இன்று திங்கட்கிழமை (27) காலை 10 மணிவரையில்  கல்முனை தெற்கு  சுகாதார பிரிவில் 144 பேருக்கும் கல்முனை வடக்கு சுகாதார பிரிவில் 11 பேருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது  .