சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி பலி!

மாவதகம பிடகந்த பகுதியில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பழைய வீட்டின் சுவரை உடைத்து அகற்றும் போது சுவர் இடிந்து விழுந்ததில் குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 8 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.