புகையிரதத்தில் மோதுண்டு பிக்கு ஒருவர் பலி

Dead2 0 1
Dead2 0 1

கஹவ மற்றும் அக்குறளவிற்கு இடைப்பட்ட பிரதேசத்தில் கடற்கரையை அண்டிய புகையிரத பாதையில் புகையிரதத்தில் மோதுண்டு பிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு (28) கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிவேக புகையிரதத்தில் மோதியதால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

எல்பிட்டிய கணேகொட புராதன ரஜமகா விகாரையைச் சேர்ந்த 30 வயதுடைய பிக்கு ஒருவரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த பிக்குவின் உடல் பிரேதப் பாிசோதனைகளுக்காக பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை காவல் துறையினர் தொிவிக்கின்றனர்.

மேற்படி சம்பவம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல் துறையினர் தொிவித்துள்ளனர்.