இரத்தினக்கற்களை விற்க முயன்ற இருவர் கைது

kaithu

புதையலில் இருந்து மீட்கப்பட்ட விலைமதிப்பற்ற இரத்தினங்கள் எனக் கூறி 27.5 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கற்களை விற்க முயன்ற இருவரை விஷேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர்.

38, 45 வயதையுடடைய இருவரே மதவாச்சி யகவெவ எனும் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இருவரும் விலைமதிப்பற்ற நீல இரத்தினம், 75 வைரங்கள் எனக் கூறி அவற்றை விற்க முயன்றுள்ளனர். எனினும் ஆரம்ப விசாரணைகளில் மீட்கப்பட்ட இரத்தினங்களுக்கு உண்மையான மதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.