யாழில் வாள்வெட்டு தாக்குதல்; மூவர் படுகாயம்

தாக்குதல் 720x380 1
தாக்குதல் 720x380 1

யாழ்ப்பாணம் வடமராட்சி, கரணவாய் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட்ட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்போது கரணவாய் பகுதியைச் சேர்ந்த சந்திரமோகன் சஜிந்தன் (வயது-29), சண்முகம் சிவஞானசுந்தரம் (வயது-55), தேவராசா ரஞ்சிதா (வயது-35) ஆகியோரே வெட்டுக் காயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் ரஞ்சிதாவுக்கு பல்வேறு பகுதிகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தெரியவருகிறது.மேலும், சம்பவம் தொடர்பாக யாழ் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.