முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

kaithu

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் சட்டவிரோதமாக தயாரித்த இடியன் துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபரிடமிருந்து இடியன் துப்பாக்கியும் காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளன

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

முல்லைத்தீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆறுமுகத்தான்குளம் பகுதியில் வீட்டில் ஒருவர் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர் குறித்த துப்பாக்கியையும், துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

குறித்த நபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு காவல்துறையினர் குறித்த நபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.