மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கு கொரோனா அன்டிஜன் பரிசோதனை எவருக்கும் தொற்று இல்லை!

IMG 6137
IMG 6137

மட்டக்களப்பு மாவட்ட செலகத்தில் கடமையாற்று உத்தியோகத்தர்கள் 72 பேருக்கு  இன்று (31) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையினை எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


மாவட்டத்தில்  கொரோனா தொற்று அதிகரித்ததையடுத்து தொடர்ந்து அரச திணைக்களங்கள் மற்றும் வர்தக நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடும் இடங்களில் ரபிக் அன்டிஜன் பரிசோதனைகளை எழுந்தமானமாக பொது சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதன் அடிப்படையில் இன்று மட்டக்களப்பு மாவட்ட  செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் க. கருணகரன் ஆரம்பித்து வைத்ததையடுத்து அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் பரிசோதனை இடம்பெற்றது இதில் எவருக்கும் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

IMG 6137
IMG 6128
IMG 6117
IMG 6128 1