இந்த ஆண்டு சவால் மிக்க சூழ்நிலையில் பிறந்திருக்கிறது – மஹிந்த யாப்பா அபேவர்தன

download
download

2021 புத்தாண்டு இந்நாட்டு மக்களுக்கும் முழு உலகிலுள்ள மக்களுக்கும் சவால் மிக்க சூழ்நிலையில் பிறந்திருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பூர்த்தியடைந்துள்ள 2020ஆம் ஆண்டு இலங்கையர்களாகிய நமக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய வருடமாக அமைந்தது.

இருப்பினும் இந்த சவால்களுக்கு சமாந்தரமாக நாம் கற்றுக்கொண்ட பாடம், ஒன்றிணைந்து பெற்றுக்கொண்ட வெற்றி என்பன புத்தாண்டுக்கு நுழையும்போது வலுவான மனோதிடத்துடன் செல்வதற்கு முக்கியமானதாக இருக்கும் என சபாநாயகர் தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.