காரைநகர் மருத்துவரை மிரட்டிய துவாரகேஸ்வரனுக்கு நீதிமன்று பிடியாணை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 6
625.500.560.350.160.300.053.800.900.160.90 6

காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியை மிரட்டி அவரை கடமையை செய்யவிடாது தடுத்த பிரபல வர்த்தகரும் அரசியல்வாதியுமான துவாரகேஸ்வரனுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்று பகிரங்கப் பிடியாணை பிறப்பித்துள்ளது.

காரைநகர் ஈழத்து சிதம்பரத்தில் இடம்பெறும் திரும்பாவை உற்சவத்தில் நீதிமன்ற அனுமதியின் பிரகாரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கோயில் பக்தர்களை அனுமதிப்பதற்கான பட்டியலை காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரியே தயாரித்திருந்தார். பட்டியல் இறுதியான பின்னர், கடந்த புதன்கிழமை சுகாதார மருத்துவ அதிகாரியின் அலுவலகத்திற்கு சென்ற பிரபல வர்த்தகரும் அரசியல்வாதியுமான துவாரகேஸ்வரன் தனது பெயரையும், வேறு சிலரின் பெயரையும் சேர்க்குமாறு மருத்துவரை வற்புறுத்தினார்.

அவர் மறுத்த நிலையில், அவரை மிரட்டியதுடன், அவரை கடமையை செய்யவிடாதும் தடுத்துள்ளார். இது தொடர்பில் மருத்துவர் ஊர்காவற்றுறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அவர் மீது காவல்துறையினர் வழக்குத் தொடுத்த நிலையில் துவாரகேஸ்வரன் தலைமறைவாகியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே அவரைக் கைது செய்ய நீதிவான் பகிரங்கப் பிடியாணை விடுத்திருந்தார்.