புதிய ஆண்டின் ஆரம்பப்பகுதியில் பல்வேறு அரச நிறுவனங்கள் தங்களது கடமைகளை இன்று ஆரம்பித்தனர்.
ஜனாதிபதி தனது கடமையை தனது செயலகத்தில் வைத்து ஆரம்பித்துள்ளார்.
இதன்போது நாட்டில் தற்பொழுது உள்ள அச்சுறுத்தலான நிலைமையை கருத்தில் கொண்டு மக்கள் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நமது நோக்கம் என்ன என்பதனையும், நமது தேவைகளையும் அறிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டியது எமது கடமையாகும் என அவர் கூறியுள்ளார்.