பேலியகொடயில் புதிய கொரோனா தொற்றாளர்கள்: யக்கஸ்துல்ல முடக்கப்பட்டது

market
market

பேலியகொட புதிய மெனிங் சந்தையில் 7 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 30 ஆம் திகதி, எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து மேலும் 112பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, வீரக்கெட்டிய காவல்துறை பிரிவிலுள்ள யக்கஸ்துல்ல  பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதி, இன்று பிற்பகல் முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளது என வீரக்கெட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.