உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதான 13 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பொலிஸாரின் ஆட்சேபனையுடன் அனைத்து சந்தேக நபர்களினதும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, இவ்வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது, சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.